சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
இசை: அ.ர. ரஹ்மான்
பாடல் ஆசிரியர்: வைர முத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆண்டு: 2000
பாடல்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது
நேரம் [நி:விநா]
[0:00] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
… … …
என்ன சொல்லப் … போகிறாய்?
[0:24] ♬
[0:39] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
[2:16] ♬
[2:52] இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே! இல்லை என்று கொல்லடி கண்ணே!
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னை துரத்தாதே உயிர் கரையெறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
[4:03] ♬
[4:41] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னை புரியாதா இது வாழ்வா சாவா?
[5:15] ♬
[5:26] என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? நியாயமா?
நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? மௌனமா? மௌனமா?
என்ன சொல்லப் போகிறாய்? [5:59]