Un Kannai Paartha Piragu En Ulla

பாடல்: உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

படம்: யுவன் யுவதி

இசை; விஜய் அந்தோணி

பாடியவர்கள்: கார்திக், ரம்யா

பாடலாசிரியர்: பிரியன்

வருடம்: 2011

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு

உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்

தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்

என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்

ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

 

அடி உன்னைப் போல பெண்ணை எங்கும் கண்டதில்லை

இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை … ஓ … ஓ … ஓ

உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்

சிலிர்க்கிறேன் தவிக்கிறேன் என் வசம் நானும் இல்லை… ஓ … ஓ

மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்

நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

 

என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னால் செல்லும்

தடுக்கிறேன் தவிக்கிறேன் இதயமும் கேட்கவில்லை… ஓ … ஓ … ஓ

நான் இன்று போல என்றும் சொக்கிப் போனதில்லை

இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை… ஓ … ஓ

நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்

இனி நாளை என்ன அவஸ்தயை புரிவாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

 

நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு

உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்

தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்

என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்

ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …

 

Leave a Reply

You must be logged in to post a comment.